Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜா.க வென்றால் மோடியே நிரந்தர பிரதமர்

மார்ச் 25, 2019 05:58

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் மோடியை தோற்கடிக்காவிட்டால், அவர் இந்தியாவின் நிரந்தரமான பிரதமராகி விடுவார் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய கெஜ்ரிவால், மோடி அரசு, ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் வழியில் நாட்டில் ஆட்சி நடத்த நினைக்கிறது. அதனால் வரும் தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும். எந்த விதத்திலும் மீண்டும் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதே நாட்டிலுள்ள ஒவ்வொரு தேசபக்தரின் நோக்கமாக உள்ளது. 

வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வென்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்து விட்டால், மோடி நாட்டின் நிரந்தர பிரதமராகி விடுவார். 2019 க்கு பிறகு நாட்டில் தேர்தலே இருக்காது. நாட்டில் ஜனநாயகமும் இருக்காது. மோடி அரசை கேள்வி கேட்பவர்கள் இன்று தேச விரோதிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள். அதனால் பா.ஜ., வை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தலைப்புச்செய்திகள்