Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தர பிரதேசத்தில் நடந்த கோர விபத்து- உ.பி.யில் 7 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 17, 2020 09:50

பிலிபிட்: உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம், புரன்பூர் பகுதியில் பேருந்தும் சொகுசு காரும் இன்று அதிகாலையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சொகுசு கார் கடுமையாக சேதம் அடைந்தது.

இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 32 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. லக்னோ நோக்கி சென்ற அந்த பேருந்தில் சுமார் 40 பேரும், சொகுசு காரில் 10  பேரும் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்