Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிமாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும்: தமிழ்த் தேசியக் கட்சி அரசுக்கு கோரிக்கை

அக்டோபர் 19, 2020 05:36

திருநெல்வேலி: தமிழ் நாட்டில், தொழில் செய்து வரும் வெளிமாநிலத்தவரை, உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் தமிழ்த் தேசியக் கட்சியின் மாநில தலைவர் தமிழ்நேசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கட்சியின், மாநில தலைவர் தமிழ்நேசன், திருநெல்வேலியில், செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்ததாவது: ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகியவை, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே,  தடை செய்யப்பட வேண்டிய கட்சிகள் ஆகும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றில், மிகப்பெரிய அளவில், ஈடுபட்டு வருபவர்கள் பி.ஜே.பி. கட்சியினர் மட்டுமே.

இந்த கட்சிகளையெல்லாம் தடை செய்யாமல், தமிழ்த் தேசம் பேசக்கூடிய,  எங்கள் கட்சியையும்,  எங்களைப் போன்ற உணர்வாளர்களையும் தடை செய்ய நினைத்தால், நாங்கள் மீண்டும், மீண்டும் எழுவோம். அதுமட்டுமல்ல, எங்கள் பணிகள், இப்போது இருப்பதைவிடவும், இன்னும் சிறப்பாகத் தொடரும். பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதை தவிர்க்க வேண்டும். அந்த திரைப்படத்தில் இருந்து, விலகிக் கொள்ள வேண்டும். தமிழ்த் தேசிய கட்சியின், நான்காம் ஆண்டு தொடக்கவிழா, அடுத்த மாதம் (நவம்பர்) 26ம் தேதி, கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் நடைபெற உள்ளது. அப்போது, அந்த விழாவில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

தமிழர்களின் வாழ்வாதாரத்தை பறித்து, வேலை வாய்ப்புக்களை பறித்து, உரிமைகளை பறித்து, மண்ணுரிமையைப் பறித்து,  மிகப்பெரிய அளவில் மூலதனத்தை போட்டு, தமிழ்நாட்டில் தொழில் செய்து வரும், மலையாளிகளையும், கன்னடர்களையும், தெலுங்கர்களையும், மார்வாடிகளையும் உடனடியாக தமிழ்நாட்டில் இருந்து, வெளியேற்ற வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசும், துறை சார்ந்த அமைச்சர்களும்,  நன்கு ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். குறிப்பாக, தமிழக முதல்வரும், தொழிற்துறை அமைச்சரும், இந்த பிரச்சினையில், தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின், மாநில தலைவர் தமிழ்நேசன் தெரிவித்தார். பேட்டியின் போது கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள் கடலூர் முல்லை நாதன், சேலம் சந்திர மோகன், துணைப் பொதுச் செயலாளர் நெல்லை பாஸ்கரன், அமைப்புச் செயலாளர் ராமநாதபுரம் கார்த்திக், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் ஆரோன் செல்லத்துரை, தென்காசி மாவட்டச் செயலாளர் கணேசன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஹக்கீம் ஆகியோர், அப்போது உடனிருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்