![](admin/uploads/.6190ab916e44b7.19781250.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவாரூர்: முத்துப்பேட்டையில் கேட்பாரற்று நின்ற இலங்கையைச் சேர்ந்த பைபர் படகில் வந்தவர்கள் யார்? அவர்கள் தமிழகத்தில் சதிச்செயலில் ஈடுபட வந்தார்களா? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு சந்தேகத்திற்கிடமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை லகூன் தீவு பகுதியில் முத்துப்பேட்டை வனத்துறை அதிகாரி பெரியசாமி தலைமையில் சென்றபோது இலங்கையை சேர்ந்த பைபர் படகு ஒன்று ஆட்கள் யாருமின்றி சந்தேகத்துக்கு நின்றுகொண்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்தப்படகை கைப்பற்றி முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மர்ம படகு குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். வந்தவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபட வந்தவர்களா? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த சில வருடங்களாக இந்த பகுதியிலிருந்து இலங்கைக்கு தொடர்ந்து கடத்தல் சம்பவம் நடந்து வருவதால் கடலோர காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.