![](admin/uploads/.6048c58e779fa6.60766946.jpg)
Sunday, 23rd June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் பழனிசாமி அரசின் அலட்சியத்தாலும், நிர்வாகத் திறமையின்மையாலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இதற்கு மேலும் விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல் கொள்முதலை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.