![](admin/uploads/.5e842bb2de5b08.77849086.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக இன்று காலை கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்றார். இன்று அவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு உடனே சென்னைக்கு திரும்புவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மம்தா பானர்ஜியை கமல் சந்திப்பது இது 3வது முறை. முதல் முறை சந்தித்தபோது தன்னை கார் வரை வந்து வழியனுப்பி வைத்த அரசியல் தலைவர் என்று புகழ்ந்து இருந்தார்.
அடுத்து கட்சி தொடங்காமல் அ.தி.மு.க. அரசை விமர்சித்து வந்த போது 2017-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி சந்தித்தார். தற்போது பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் மம்தாவை கமல் சந்திப்பது பரபரப்பாகி உள்ளது.