Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரே நாளில் பிரதமர் மோடி 3 மாநிலத்தில் பிரசாரம்

மார்ச் 26, 2019 05:10

புதுடில்லி: வரும் 28 ம்தேதி ( வியாழக்கிழமை) பிரதமர் மோடி 3 மாநிலத்தில் பிரசாரம் செய்கிறார். லோக்சபா தேர்தல் நெருங்க, நெருங்க அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ( மார்ச் 26 ) . கட்சி வாரியாக நட்சத்திர பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 

பா.ஜ., வை பொறுத்தவரை பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கே மக்கள் கூட்டம் அதிகம் வரும். இவர் பிரசாரத்திற்கு பின்னர் மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்க முடியும் என பா.ஜ,. நம்புகிறது. ஆதலால் பிரதமர் மோடி ஏறக்குறைய 300 க்கும் மேற்பட்ட கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

வரும் 28ம் தேதி உ.பி., உத்தரகண்ட், ஜம்முகாஷ்மீர் என 3 மாநிலத்தில் ஒரே நாளில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்கிறார். சமீபத்தில் பிரதமர் மோடி , பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை காஷ்மீர் , உத்தரகண்ட் பகுதியில் துவக்கி வைத்தார். இது போன்ற வளர்ச்சி திட்டங்கள் பா.ஜ.,வுக்கு கைகொடுக்கும் என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்