![](admin/uploads/.654f18cee80600.63017615.jpg)
Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி: மனுதர்மம் சனாதன நூலை தடைசெய்ய வலியுறுத்தி, திருநெல்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மனித குலத்தைப் பிளவுபடுத்துகிற, பெண்ணினத்துக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியுள்ள, காலம் காலமாக, பெண்களை இழிவு செய்யும், மனு தர்மம் என்னும், சனாதன நூலை தடை செய்ய வலியுறுத்தி, திருநெல்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி மாநகராட்சி, பேட்டையில் உள்ள, முனிசிபல் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமை வகித்தார். வழக்கறிஞர் அரசு பிரபாகரன், திருநெல்வேலி் சட்டமன்றத் தொகுதி செயலாளர் பாஸ்கர், துணைச் செயலாளர் ஜெயக்குமார், தொழிலாளர் விடுதலை முன்னணியின், மாவட்ட அமைப்பாளர் செல்வராசு, பகுதிச் செயலாளர்கள், திருநெல்வேலி சங்கரன், துணைச் செயலாளர் இசைச்செல்வம், மாணவர் முற்போக்கு கழகப் பிரதிநிதி முகிலன் மற்றும் கட்சித் தொண்டர்கள் கருணாகரன், நடராஜன், முருகன், கார்த்திக், சோபன், முகேஷ் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக, தமிழ் புலிகள் கட்சியின், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் தமிழரசு, திராவிடர் தமிழர் கட்சியின், மாநில பொதுச் செயலாளர் கதிரவன், மாவட்டச் செயலாளர் திருக்குமரன் ஆகியோர் பங்கேற்று, கண்டன உரை நிகழ்த்தினர்.