Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புகையிலை பொருட்கள் விற்பனை: கூடங்குளத்தில் ஒருவர் அதிரடி கைது

அக்டோபர் 26, 2020 06:25

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக, ஒருவர் கைது செய்யப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புகையிலை போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில், மொத்தம் உள்ள, 10 கடலோரக் கிராமங்களில் ஒன்றான,  கூடங்குளத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, விற்பனை செய்ததாக, அதே ஊரைச் சேர்ந்த,  குலசேகர பெருமாள் என்பவரின் மகனான,  கண்ணன் (வயது 55)  என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், தொடர்ந்து பல ஆண்டுகளாக, புகையிலை பொருட்களையும், பல்வேறு பீடிக்கம்பெனிகளின் பெயரிலான, போலி பீடிகளை பண்டல், பண்டலாக விற்று வந்துள்ளார்.  காவல்துறையினர், இவரை இடைவிடாது,  கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அவருடைய வீட்டை, காவல்துறை உயர்அலுவலர்கள் அதிரடியாக  சோதனை செய்தனர்.

அப்போது, அவருடைய வீட்டில் இருந்து,  லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை, உடனடியாக பறிமுதல் செய்த,  கூடங்குளம் காவல் ஆய்வாளர்  அந்தோணி ஜெகதா தலைமையிலான போலீசார்,  தடைசெய்யப்பட்ட புகையிலை போதை பொருட்களை,  பதுக்கி வைத்திருந்த,  குற்றவாளியான கண்ணனை கைது செய்தனர். அவர் மீது, வழக்குப்பதிவு செய்து,  விசாரணை  நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்