![](admin/uploads/.602378f6b83916.93412777.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,'' என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா 2-வது அலை உச்சகட்டமாக தாக்கி வருகிறது. ஆனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் கணிசமாக குறைந்துவிட்டது. மாநிலங்களிலும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பரிசோதனையில் தமக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார். மேலும் தனிமைப்படுத்திக் கொண்டே பணிகளை தொடர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் அண்மை நாட்களில் தம்மை சந்தித்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சக்திகாந்த தாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார். வீடியோ கான்ஃபரன்ஸ், தொலைபேசி மூலம் தொடர்ந்து தொடர்பில் இருப்போம் என்றும் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.