![](admin/uploads/.5f6ddc0a6cb349.44028008.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சை: தஞ்சை ராஜராஜ சோழன் சிலையை வருகிற ஒரு வருடத்திற்குள் கோயிலின் உள்பகுதியில் அரசு வைக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் சிலை செய்து வைப்போம்,'' என்று முக்குலத்து புலிகள் நிறுவனத்தலைவர் ஆறு சரவணன் தெரிவித்தார். தஞ்சையில் உலக பிரசித்தி பெற்ற பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் பிறந்த நாளான சதய விழாவாக அரசு கொண்டாடுகிறது இந்த விழாவிற்கு அரசியல் அமைப்புகள், சமயம் சார்ந்த அமைப்புகள் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம்.
அதேபோல் ஒவ்வொரு அமைப்புகளாக மாலை அணிவித்து வருகின்றனர். அதன்படி முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத்தலைவர் ஆறு சரவணன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
உலகையே ஆச்சரியப்பட வைக்கும் அளவில் ஆட்சி செய்த நமது மன்னன் ராஜராஜ சோழன் அவருடைய சிலையை மூன்று வீதிக்கு வெளியில் வைத்துள்ளனர். இந்த சிலையை வருகிற அடுத்த சதய விழாவிற்கு கோயிலின் உள் பகுதியில் அரசு வைக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் ராஜராஜ சோழன் சிலையை செய்து பெரியகோயில் பகுதியில் கொண்டு வந்து வைப்போம். இதனால் எந்த போராட்டம் வெடித்தாலும் நாங்கள் சந்திக்க தயார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.