![](admin/uploads/.60643dacea1730.62069010.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை,: லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை நிறைவடைகிறது.
தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ள 18 தொகுதிகளுக்கும் 19ம் தேதி மனு தாக்கல் துவங்கியது.
முதல் மூன்று நாட்கள் மனு தாக்கல் மந்தமாக இருந்தது.சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின் நேற்று மீண்டும் மனு தாக்கல் துவங்கியது; நேற்று ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர். லோக்சபா தொகுதிகளுக்கு 75 பெண்கள் இரண்டு திருநங்கையர் உட்பட 560 பேர் மனு தாக்கல் செய்தனர்.சட்டசபை இடைத்தேர்தலில் 38 பெண்கள் உட்பட 221 பேர் மனு தாக்கல் செய்தனர். இன்று மனு தாக்கல் செய்ய கடைசி நாள். எனவே இன்று ஏராளமானோர் மனு தாக்கல் செய்ய வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று மாலை 3:00 மணிக்கு மனு தாக்கல் நிறைவடைகிறது. மாலை 3:00 மணிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு மனு தாக்கல் செய்ய வருவோர் அனைவரும் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர்.