![](admin/uploads/.5cdd66a89153b7.10754798.gif)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
லோக்சபா: விஜயகாந்தின் மகன்கள், ஆன்மிக அரசியலில் ஆர்வம் காட்டுவதால், தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.விஜயகாந்தின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கட்சி தொடர்பான பணிகளை, அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் மேற்கொண்டு வந்தனர். தற்போது, விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன், கட்சி பணிகளில் இறக்கப்பட்டுள்ளார். இளைய மகன் சண்முகபாண்டியன், சினிமாவில், கதாநாயகனாக நடித்து பிரபலம் என்பதால், பிரசாரத்தில் ஈடுபடுத்த, விஜயகாந்த் முடிவு செய்தார்.
லோக்சபா தேர்தலில், விஜயகாந்தின் இரண்டு மகன்களும், தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவர் என, அறிவிக்கப்பட்டதால், தே.மு.தி.க., தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், பிரசாரம் செய்வதை காட்டிலும், கட்சி வெற்றிக்காக, கோவில்களில் யாகம், சிறப்பு பூஜை, கோமாதா பூஜை செய்வது என, விஜயகாந்தின் இரண்டு மகன்களும் காலம் கடத்தி வருகின்றனர். தங்கள் திறமைகளை வெளிப்படுத்தாமல், விஜயகாந்த் மகன்கள் செயல்படுவது, தே.மு.தி.க., வேட்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.