![](admin/uploads/.5fcf11bc2170d5.93314335.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராகுல் காந்தி தேர்தல் குறித்து ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்ததால் தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார் செய்துள்ளது. பீகார் மாநில சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது, இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை ஐந்து மணியோடு முடிவுக்கு வந்தது. அதன்பின் வாக்கு சேகரிப்பது குறித்த செய்திகளை வெளியிடக்கூடாது.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் பகுதியில் அப்படியொது பதிவு போட்டுள்ளார். இதை சுட்டிக்காட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பா.ஜனதா சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.