Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரியலுாரில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம்

அக்டோபர் 29, 2020 05:20

அரியலூர்: பா.ஜ.க. கட்சியின் ஓ.பி.சி. அணி மாவட்ட செயற்குழு கூட்டம் அரியலூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைப்பெற்றது. அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஓ.பி.சி. அணி மாவட்ட செயற்குழு கூட்டம் அரியலூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைப்பெற்றது. ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஓ.பி.சி. அணியில் உறுப்பினர் சேர்ப்பது சம்மபந்தமாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் மனுதர்மம் என்ற பெயரில் பெண்களை இழிவாக பேசிய வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவனை வன்மையாக கண்டிப்பது. 

அரியலூர் சிமெண்ட் ஆலை லாரிகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கவேண்டும். அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றபட்டன. இக்கூட்டத்தில் ஓ.பி.சி. அணி மாநில துணை தலைவர் அகோரம், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மாநில செயலாளர் குமார் உள்ளிட்ட ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்