Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போட்டியில்லை: அஜித் ஜோகி முடிவு

மார்ச் 26, 2019 05:47

சத்தீஸ்கர்: காங்கிரசில் இருந்து விலகி, தனிக்கட்சி துவங்கிய அஜித் ஜோகி, 72, நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என, அறிவித்துள்ளார். இது, சத்தீஸ்கர் மாநில அரசியல் வட்டாரங்களில், பல விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. 

முன்னாள் முதல்வரான இவர், காங்கிரசில் இருந்து, 2015ல் விலகி, சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் என்ற, கட்சியை துவக்கினார். அதற்கு முன், 2004ல் தேர்தல் பிரசாரத்தின் போது பயங்கர விபத்தைச் சந்தித்து நடமாட முடியாமல் முடங்கினார். அதனால் அவரை, காங்., கண்டு கொள்ளவில்லை என, கூறப்படுகிறது. போட்டியிடவில்லை என்ற இவரின் முடிவால் இந்த தேர்தல், சத்தீஸ்கர் மாநிலத்தில், பா.ஜ.,வுக்கும், காங்.,க்கும் நேரடி இருமுனை போட்டியாக மாறி உள்ளது.

தலைப்புச்செய்திகள்