Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

என்.டி.ஆர்., மகளுக்கு பா.ஜ., வழங்கிய சீட்

மார்ச் 26, 2019 05:52

விசாகப்பட்டினம்: பா.ஜ.,வின் முதல் வேட்பாளர் பட்டியலில், முன்னாள் மத்திய பெண் அமைச்சர், புரந்தேஸ்வரி, 60, பெயர் இடம்பெற்று உள்ளதால், அவரின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்து உள்ளனர். 

ஏப்., 11ல், லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் சந்திக்க உள்ள ஆந்திராவில், பா.ஜ., சார்பில் போட்டியிடும், 184 பேர் அடங்கிய முதல் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சி மேலிடம் வெளியிட்டது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி பெயர் இடம் பெற்றுள்ளது, என்.டி.ஆர்., குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

புரந்தேஸ்வரி, 2014ல் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தார். அப்போது, கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். தற்போது, விசாகப்பட்டினம் தொகுதி வேட்பாளராக, புரந்தேஸ்வரியை, பா.ஜ., மேலிடம் அறிவித்துள்ளது. ஐந்தாண்டுகளாக வேறு கட்சிக்கு மாறாமல், பா.ஜ.,விலேயே இருக்கும் அவரையும், என்.டி.ஆரையும் கவுரவப்படுத்தும் விதமாக, அவருக்கு மீண்டும், 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. எனினும், வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தலைப்புச்செய்திகள்