Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லஞ்ச ஒழிப்பு காவல் துறை சோதனை: அரசு அலுவலகத்தில் ரூ.81,000 பறிமுதல்  

அக்டோபர் 30, 2020 09:00

சென்னை: சென்னை அம்பத்தூரில் ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 81 ஆயிரம் பணம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூரில் ஊரக வளர்ச்சித் துறையின் உதவி   செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கையூட்டூ பெறுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலான 6 பேர் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் உதவி செயற்பொறியாளர் கீதா உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது ஓட்டுனர்களிடம் விசாரணை நடைபெற்றது.

பின்னர் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கணக்கில் கட்டப்படாத 81 ஆயிரம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்