Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேன் தலைகீழாக கவிழ்ந்ததில் இருவர் பலி 

அக்டோபர் 30, 2020 09:03

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற டாட்டா ஏ.சி. வாகனம் தலைக்குப்பற கவிழ்ந்ததில் இருவர் பலி.யான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே வெள்ளன கோட்டை பகுதியை சேர்ந்த கணிராஜ் என்பவரது குடும்ப நிகழ்ச்சிக்காக கோட்டை மலையாறு கருப்பசாமி கோயிலுக்குச் சென்றிருந்தார். கோயிலுக்கு சென்று விட்டு டாடா ஏ.சி. வாகனத்தில் அதிகமான நபர்களை ஏற்றிக்கொண்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ரத்தினபுரி அருகே வேகமாக வரும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வெள்ளன கோட்டையைச் சேர்ந்த சுந்தராம்பாள், மாரிச்சாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 15க்கும் மேற்பட்டோர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்