Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜனதா ஆட்சி அமைந்ததும் அனைவருக்கும் வீடு- சாமிநாதன் எம்எல்ஏ உறுதி

நவம்பர் 03, 2020 05:58

புதுச்சேரி: புதுவை பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. முன்னிலையில் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் பிரமுகரும், அட்சயா அறக்கட்டளை மற்றும் சைன்பேரா மெடிக்கல் குழுமத்தின் தலைவியான தமிழ்ச்செல்வி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சாமிநாதன் எம்.எல்.ஏ., புதுவையில் 2021-ல் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தவுடன் மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தவுடன் ரூ.7 ஆயிரம் கோடி கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். மூடப்பட்டுள்ள மில்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம், அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி, தொகுதி தலைவர் துரைசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் வடிவேல், தொகுதி பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, சுகுமார், முத்துநாராயணன் ரெட்டியார், பிரபாகர் ரெட்டியார், விஷ்வா மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்