![](admin/uploads/.5d396808ed98f3.06293115.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாட்னா: பீகார் மாநிலத்தின் பேரவைத் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. 3 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் 2-ஆம் கட்டமாக செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களித்த லோக்ஜன்சக்தி கட்சியின் தலைவரான சிராக் பாஸ்வான் ககரியா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நிதிஷ் குமார் பீகார் முதல்வராக மீண்டும் ஆக முடியாது. மக்கள் அவரை நிராகரித்திருக்கிறார்கள். முதல் கட்ட தேர்தல் முடிந்த பிறகு நிதிஷ்குமார் முகத்தில் அச்சத்தை காண முடிகிறது. நிதிஷ் குமாருக்கு வாக்களித்து பீகார் மக்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம்” என்றார்.