Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டிரான்ஸ்பார்மரில் திடீர் மின்கசிவு: பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பலி

நவம்பர் 05, 2020 05:46

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இடியுடன் கனமழை காரணமாக தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகே டிரான்ஸ்பார்மரில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதால் அதில் சிக்கி இரண்டு பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பலியாகின. தூத்துக்குடியில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. 

இந்நிலையில் தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகே டிரான்ஸ்பார்மரில் மின் கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான  இரண்டு பசு மாடுகள் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியாகின.

இந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி மின் கசிவு ஏற்படுதாகவும், ஆனால், மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதனை கண்டுகொள்வதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்