![](admin/uploads/.5db12f096f4c58.81646600.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், விபத்தில்லா மாவட்டமாக உருவாக, சாலை பாதுகாப்பு குறித்து, மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்று கொண்ட, வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் தெரிவித்தார். திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலராக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, பணியாற்றி வந்த சேக் முகம்மது என்பவர் ராமநாதபுரத்துக்கு, பணிமாறுதலில் சென்றார். இதை தொடர்ந்து, கோவில்பட்டியில் பணியாற்றி வந்த, சந்திர சேகரன் என்பவர் திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலராக, புதிதாக பொறுப்பேற்று கொண்டார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் சந்திரசேகரன் தெரிவித்ததாவது:
விபத்தில்லா மாவட்டமாக, நெல்லை மாவட்டத்தை உருவாக்கிடும் உன்னத நோக்கத்தில், போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சாலை பாதுகாப்பு அம்சங்கள் போன்றவை குறித்து, மாவட்டம் முழுவதும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, அவர்கள் பயின்று வரும் கல்வி நிறுவனங்களுக்கே சென்று, சாலை விதிமுறைகள், போக்குவரத்து சட்டதிட்டங்கள் பற்றி, எடுத்துரைக்கப்படும். கடந்த ஆண்டுகளை போன்று இல்லாமல், இந்த ஆண்டு அதிக விபத்து ஏற்படாத வகையில் புதிய சாதனை படைக்கப்படும். இவ்வாறு அவர் நம்பிக்கை தெரிவித்தார்.