Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராகுல் காந்தியின் திட்டத்தை அமல்படுத்தவே முடியாது: நிதி ஆயோக் துணைத்தலைவர்

மார்ச் 26, 2019 06:58

புதுடெல்லி: மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார், காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பு திட்டத்தை விமர்சித்துள்ளார். அவர் ‘டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது. 

நிலவை பிடித்துக் கொடுப்போம் என்ற பழைய வாக்குறுதி பாணியில், காங்கிரஸ் தலைவர் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அது, பணி மனப்பான்மைக்கு எதிராக அமைவதுடன், நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும்.  

இதன் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகவும், பட்ஜெட்டில் 13 சதவீதமாகவும் இருக்கும். இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. காங்கிரசின் முந்தைய கோஷங்களுக்கு ஏற்பட்ட கதிதான் இதற்கும் ஏற்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்