Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது- முதலமைச்சர்

நவம்பர் 06, 2020 06:48

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ரூ.131.57 கோடி மதிப்பிலான 123 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.189.33 கோடி மதிப்பிலான 67 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்

நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

* அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் குறைவு என கூறினார்கள்.  ஆனால் அங்கு தற்போது அதிகரித்துள்ளது.

* கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் சராசரியாக தினமும் 70 ஆயிரம் பரிசோதனை நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்