Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராமநாதபுரம்: ஏர்வாடி தர்கா பகுதியில் பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்த முஹம்மது யூனுஸ் என்பவர் இலங்கை வழியாக இந்தியாவிற்குள் வந்து ஏர்வாடி தர்கா பகுதியில் தங்கினார்.
அவர் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் ஏர்வாடி தர்காவில் இருந்த யாரோ ஒருவர் இதுகுறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து ஏர்வாடி தர்கா சென்ற போலீசார் சந்தேகத்துக்கிடமான முஹம்மது யூனுஸ் என்பவரிடம் விசாரணை செய்தனர். அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் ஜே..எம்-2 நீதிபதி ராதாகிருஷ்ணன் முன்னிலையில் காணொளி காட்சியில் விசாரணை நடத்தி பாகிஸ்தானை சேர்ந்த முதியவர் முஹம்மது யூனுஸூக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அதிரடியாக வழங்கினார்.