Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.ம.மு.க. பிரரமுகர் மறைவு: குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்

நவம்பர் 07, 2020 11:08

தென்காசி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட பிரதிநிதி மறைவை முன்னிட்டு அவரது குடும்பத்திற்கு திருநெல்வேலி மாநகர் மாவட்ட பொருளாளர் ஜோதிராஜ் மற்றும் நிர்வாகிகள் நிதியுதவி வழங்கினர். திருநெல்வேலி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட பிரதிநிதி பாண்டியன் இயற்கை எய்தினார். 

அவரது குடும்பத்திற்கு திருநெல்வேலி மாநகர் மாவட்ட பொருளாளர் ஜோதிராஜ் மற்றும் சங்கரன்கோவில் நகர செயலாளர் முப்புடாதி தலைமையில் நெல்லை மாவட்ட ஓட்டுனர் அணி செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைமை பேச்சாளர் ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அரிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், கழக உறுப்பினர் சண்முகவேல், வார்டு செயலாளர் தங்கராஜ், மற்றும் சுந்தர் ஆகியோர் இயற்கை எய்திய நெல்லை மாநகர் மாவட்ட பிரதிநிதி பாண்டியன் வீட்டிற்க்கு நேரடியாக சென்றனர்.

திருநெல்வேலி மாநகர மாவட்ட அ.ம.மு.க. சார்பிலும், சங்கரன்கோவில் நகரம் சார்பிலும் அவரது குடும்பத்தினரிடம் நிதி உதவி வழங்கி பாண்டியன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

தலைப்புச்செய்திகள்