Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர்: காவல் நிலையத்திலிருந்து தப்பி தலைமறைவு

நவம்பர் 07, 2020 11:22

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 4  குற்றவாளிகள் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அலுமினியம் தொழிற்சாலைகளில் புகுந்து அலுமினியம் அச்சுகள் திருடிய வழக்கில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் ஆவடியை சேர்ந்த ஆனந்த் ராஜ், முருகா, ராஜேஷ் மற்றும் அம்பத்தூரை சேர்ந்த பாபு மற்றும் 17 சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து 80 ஆயிரம் பணம், 60 அலுமினிய அச்சுகளை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சிறுவன் மட்டும் நீதிமன்ற ஜாமினில் வெளியான நிலையில் அம்பத்தூர் காவல் நிலையத்தில் மீதி இருந்த நான்கு பேரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைக்க காவல்துறையினர் திட்டமிட்டு இருந்தனர். காவல் நிலையத்தில் இருந்த ஆனந்த் ராஜ்,முருகா, ராஜேஷ், பாபு ஆகிய நான்கு பேரும் காவல் நிலையத்தில் காவல் பாதுகாப்பில் இருந்து தப்பி சென்றனர்.

இச்சம்பவத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீஸாரே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் காவல் பாதுகாப்பில் இருந்து தப்பி சென்ற நால்வரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்