![](admin/uploads/.60c4a2ea132ca2.69512267.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: நடிகர் விஜய்யை சுற்றி கிரிமினல்கள் இருக்கிறார்கள். இதனால் அவருக்கு ஆபத்து நேரிடலாம்,'' என அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கினார். தான் அரசியல் கட்சி தொடங்கியது உண்மைதான். ஆனால், தனது மகனுக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட விஜய், என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகா் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் மூலம் அறிந்தேன். அவா் தொடங்கிய கட்சிக்கும், எனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தொடா்பும் இல்லை.
இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ, கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். விஜய்யின் இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியும் விஜய்யின் தாயாருமான ஷோபா கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளதாவது:
எல்லா அப்பா மகனைப் போல எனக்கும் விஜய்க்கும் அவ்வப்போது சண்டை வரும். பேசாமல் இருப்பது சாதாரணமானதுதான். விஜய் தான் எனக்கு கடவுள். அதை அவர் விரைவில் புரிந்து கொள்வார். விஜய் என்னை விட புத்திசாலி. அவருக்கு தெரியாத ரகசியம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அது விரைவில் உடையும். விஜய் ஒரு சிறிய விஷ வளையத்தில் சிக்கியுள்ளார். அவரை சுற்றி கிரிமினல்கள் உள்ளார்கள்.
அவர்களால் விஜய்க்கு ஆபத்து ஏற்படலாம். அவரை சுற்றி ஆபத்தான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து வெளியே வர வேண்டும். என் பிள்ளையை காப்பாற்ற வேண்டும். அவரை காப்பாற்றவே நான் முயற்சி செய்கிறேன். மேலும் விஜய் வெளியிட்ட அறிக்கை, அவர் வெளியிட்ட அறிக்கை இல்லை. இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யை சுற்றி ஆபத்து இருப்பதாக அவரது அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருப்பது சினிமாவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.