Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் கிராம உதயம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை லயன் சங்கர சுப்பையா தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் அழகை கண்ணன் முன்னிலை வகித்தார். கிராம உதயம் களப்பணி நிர்வாகிகள் கணேசன், ஜெயராணி, சங்கரா கண் மருத்துவமனை களபணியாளர் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் முகாமில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்த கண்பரிசோதனை முகாமில் பங்கேற்றோர் முகக்கவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.