Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லாரி மோதியதில் பெண் நசுங்கி பலி

நவம்பர் 08, 2020 06:01

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பில், பைக் மீது லாரி உரசியதில், லாரியின் சக்கரத்தில் சிக்கியதில், பெண் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருநெல்வேலி, பாளையங்கோட்டையை அடுத்துள்ள, கீழநத்தம் பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன்(வயது. (57). உள்ளூர் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி (வயது.54)  .கணவன், மனைவி இருவரும், நண்பகலில், ஒரே பைக்கில், திருநெல்வேலி டவுனுக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஒருமணி அளவில், ஸ்ரீபுரம் அருகில் வந்து கொண்டிருந்த போது, அங்குள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு அரிசி லோடு ஏற்றச் சென்ற லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக, பைக்கின் பக்கவாட்டில் வந்து உரசியது. இதில் பைக்கில் இருந்த கணவன்,மனைவி இருவரும், நிலை தடுமாறி, பைக்கில் இருந்து, கீழே விழுந்தனர்.

அப்போது சாந்தி மீது, லாரியின் பின்சக்கரம் ஏறி, இறங்கியதில், சம்பவ இடத்திலேயே, உடல் நசுங்கி, ரத்த வெள்ளத்தில், பரிதாபமாக சாந்தி உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் கணவர் உயிர்பிழைத்தார். இந்த விபத்து குறித்து, திருநெல்வேலி மாநகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்