Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நியமனம்

நவம்பர் 09, 2020 05:00

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட, தி.மு.க. செயலாளராக, இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள, முன்னாள் சபாநாயகர்  ஆவுடையப்பனுக்கு தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். மாநிலம் முழுவதிலுமாக உள்ள, 234 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், தொகுதிகள் வாரியாக, புதிதாக மாவட்ட செயலாளர்களை, தி.மு.க. தலைமை கழகம் அண்மையில் அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களுக்கான செயலாளர்கள் பட்டியலை, கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் முறைப்படி வெளியிட்டார். அதன்படி, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட,  தி.மு.க. செயலாளராக, தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் ஆவுடையப்பன் அறிவிக்கப்பட்டார்.

இரண்டாவது முறையாக, இவ்வாறு அறிவிக்கப்பட்டதற்காக, ஆவுடையப்பனை  பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள, ஆவுடையப்பனின் இல்லத்தில், வள்ளியூர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள் மந்திரம், சார்லஸ், வைகுண்ட ராஜா, கிருஷ்ணராஜ் மற்றும் கருணாநிதி உட்பட, ஏராளமான தொண்டர்கள் நேரில் சந்தித்து, தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்