Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் 

நவம்பர் 10, 2020 04:53

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கேரள அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் 24 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும்,''  என்று அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் 15ம் தேதி கோவில் நடை திறக்கப்பட உள்ளது. பக்தர்கள் கார்த்திகை 1ம் தேதி அதாவது வரும் 16ம் தேதி முதல் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கேரள அரசு அறிவித்தது.

ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் 1,000 பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இதன் முக்கிய விதிமுறையாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. பம்பையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கேரள அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் 24 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அறிவித்துள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா இருப்பின் அவர்கள் அங்கேயே தங்கி சிகிச்சை பெறவும் அல்லது அவர்களின் விருப்பத்தின் பேரில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது. முன்னதாக 48 மணி நேரத்துக்கு முன்பாக சோதனை எடுத்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அது 24 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்