Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த வரதய்யபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமரெட்டி மற்றும் போலீசார் இணைந்து வரதய்யபாளையத்தை அடுத்த ட்ரங்க் சாலையில் உள்ள தர்மலிங்கம் என்பவரின் கடையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் உரிமமின்றி பதுக்கி வைத்திருந்ததைப் பறிமுதல் செய்தனர். அதே பகுதியைச் சேர்ந்த குருரத்னம் என்பவருக்கு சொந்தமான கடையில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள், வெங்கடேஸ்வர்லு என்பவருக்கு சொந்தமான குளிர்பானக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் உரிமமின்றி இருந்தது தெரிய வந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.