![](admin/uploads/.5f1bdbe04bfe68.33025783.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தினைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா (வயது 24). இவருக்கும், பொட்டிதட்டி கிராமத்தை சேர்ந்த திருப்பதி குமார் (34) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், 2½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். தற்போது இவர்கள் பொட்டிதட்டி காலனியில் வசித்து வந்தனர்.
திருப்பதி குமார் மீது வழிப்பறி, திருட்டு, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனால் அவர் அடிக்கடி சிறைக்கு சென்று வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்ததாக அவர் சிறை சென்று சில நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்துள்ளார். மேலும் மனைவி சங்கீதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த திருப்பதிகுமார், மனைவி சங்கீதாவை அடித்து உதைத்துள்ளார். மேலும் உருட்டு கட்டையாலும் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சங்கீதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக அக்கம்பக்கத்தினர் பரமக்குடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி திருப்பதிகுமாரை கைது செய்தனர்.