![](admin/uploads/.5d6282adccc3f2.25506143.jpg)
Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்போரூர்: காஞ்சி பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செங்கல்பட்டு, உத்திரமேரூர், மதுராந்தகம், திருப்போரூர், கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் வாக்குகள் சேகரித்தார். அவர் பேசியதாவது:-
காஞ்சிபுரம் பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் மரகதம்குமரவேல், மற்றும் திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு போட்டியிடும் ஆறுமுகம் ஆகியோரை பெருவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறசெய்ய வேண்டும். இவர்கள் வெற்றி பெற்றால் காஞ்சிபுரம் ம £வட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தனி மாவட்டமாக உருவாக்குவது, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரிவுபடுத்தி குடிநீர் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
மேலும் தொகுதிமக்களுக்காக பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் கேட்டு பெற்று தொகுதிவளர்ச்சிக்கு தேவையானவற்றை செய்துகொ டுப்பார்கள். எங்களின் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. மீண்டும் மோடி பிரதமரானால் ஜிஎஸ்டி வரிகுறைப்பு, வேலைவாய்பை அதிகரித்தல். இன்னும் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்ற வலியுறுத்தப்படும். சதிகாரர்கள், சூழ்ச்சிகாரர்களுக்கு இந்த தேர்தலில் தக்கப £டம் புகட்டுங்கள். 40 பாராளுமன்ற தொகுதிகள், 18 சட்டமன்ற தொகுதிகளில் நம் கூட்டணி வெற்றிபெறும் என அவர் பேசினார்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன், ஒன்றிய செயலாளர் குமரவேல், அ.தி.மு.க. நிர்வாகிகள், பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க, புரட்சிபாரதம், த.மா.க உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டணிகட்சி தொண்டர்கள் கட்சிகொடியுடன் வீதி வீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.