Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரில் ராணுவ வீரர் தற்கொலை

டிசம்பர் 04, 2020 06:57

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் ஷவூரா கிராமத்தில் புதன்கிழமை இரவில் திடீர் துப்பாக்கிசூடு சத்தம் கேட்டுள்ளது. ஏதோ அசம்பாவிதம் நடப்பதாக கிராமத்தினர் பீதி அடைந்தனர். ஆனால் சிறிது நேரத்திற்கு பின்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பது தெரியவந்தது. அவர் பாதுகாப்பு பணிக்காக தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துள்ளார்.

அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அன்றைய தினத்தில் காஷ்மீரில் வேறொரு பகுதியில் மற்றொரு ராணுவ வீரரும் தற்கொலை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்