Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

3 முறை கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி

டிசம்பர் 04, 2020 07:50

சென்னை: உலகம் முழுவதும் 6 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா நோய்க்கு இரையாகி உள்ளனர். கொரோனா நோயானது பெரும்பாலும் வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட பிற நோய் இருந்தவர்களின் உயிரையே பறித்துள்ளது.

இந்நிலையில் இத்தாலியை சேர்ந்த 101 வயதான மரியா ஒர்சிங்கர் என்கிற மூதாட்டி மூன்று முறை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். 100 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த மரியா ஸ்பேனிஷ் காய்ச்சலையும் இதுபோலவே எதிர் கொண்டு பிழைத்து வந்தவர் என்பதால் அவரை அனைவரும் மரணத்தை வென்றவர் என புகழ்ந்து தள்ளுகின்றனர். 

தலைப்புச்செய்திகள்