![](admin/uploads/.5f81868a8494e3.39590173.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தமிழ் திரையுலகில், ‘அட்டகத்தி’ மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் பா.ரஞ்சித். பின்னர் ரஜினி நடித்த , ‘கபாலி’, ‘காலா’ படங்களை இயக்கி உலகளவில் கவனம் பெற்றார். இதனை தொடர்ந்து பிர்சா முண்டாவின் வாழ்க்கை கதையை பா.ரஞ்சித் படமாக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய்யை சந்தித்து பா.ரஞ்சித் சூப்பர் கதை ஒன்று சொன்னதாகவும், அது விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். எனவே விஜய் நடிப்பில் விரைவில் பா.ரஞ்சித் ஒரு படம் கூடும் என கூறப்படுகிறது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.