Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மின்வாரியம் அலட்சியம்; பழுது நீக்கிய ஊழியர், உதவியாளர் உயிரிழப்பு

டிசம்பர் 05, 2020 05:06

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் தொடர் மழை காரணமாக, நேற்று மின்சாரம் தடை செய்யப்பட்டது. அங்கு உயர்மின் அழுத்த கம்பி பழுதானதால், அதனை சரி செய்ய மின் வாரிய ஊழியர் பாக்கியநாதன் மற்றும் அவருக்கு உதவும் வகையில்  தயாளன் ஆகியோர் சென்றனர். உதவியாளர் தயாளன் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது. அறுந்து விழுந்த மின்கம்பியை ஊழியர்கள் சரிசெய்ய சென்றபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக நினைத்துள்ளனர். ஆனால் துணை மின்நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை.

அப்போது அந்தப்பகுதியின் வயல்வெளியில் மின்கம்பியானது அறுந்து விழுந்து அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்துள்ளது. இரவு நேரம் என்பதால் அங்கு போதுவான வெளிச்சமும் இல்லை. அப்போது அங்கு சென்ற பாக்கியநாதன் மற்றும் உதவியாளர் தயாளன் வயல்வெளியில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். தகவலறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். 

தலைப்புச்செய்திகள்