Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் நீதி மய்யம் கட்சியில் ‘மய்யம் மாதர் படை’ புதிய பிரிவு- கமல்ஹாசன் அறிவிப்பு

டிசம்பர் 06, 2020 10:52

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெண் சமத்துவத்தை வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல், மக்கள் நீதி மய்யம் கட்சி தனது செயல்பாடுகளிலும் சரியான பங்களிப்பை கொடுத்து அவர்கள் கரம் உயர்த்த விரும்புகிறது. அந்த வகையில் புதியதோர் முன்னெடுப்பாக ‘மய்யம் மாதர் படை’ என்ற பிரிவு ஆரம்பிக்கப்படுகிறது. கட்சியின் கட்டமைப்பு மற்றும் அணிகளில் பொறுப்பு வகிக்கும் மகளிரும், கட்சியின் உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் இதில் பங்கு பெறலாம். சில செயல் திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்த அதிரடியாக ஒன்றிணைந்து செயல்படுவதே இந்தப் பிரிவின் நோக்கம்.

கட்சி சாராத ஆனால் மக்கள் நலனிலும், தமிழகத்தைச் சீரமைப்பதில் ஒருமித்த நோக்கமும் கொண்ட பெண்களும் கூட இந்த பிரிவில் இணைந்து செயல்படுவார்கள். வருகிற 12 மற்றும் 13-ந்தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் சார்பில் பூத் அமைக்கப்படுகிறது. இதில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான முன்னெடுப்பை ‘மய்யம் மாதர் படை’ மேற்கொள்ளவிருக்கிறது. இந்த பிரிவு மகளிர் அணியின் சென்னை மண்டல துணைச் செயலாளர் சினேகா மோகன்தாஸ் மேற்பார்வையில் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்