![](admin/uploads/.5d5a2460b9dc35.43161474.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஸ்ரீகாளஹஸ்தி: கடப்பா மாவட்டம் ராமாபுரம் மண்டலம் போத்துக்கூருப்பள்ளியைச் சேர்ந்தவர் சலபதி. இவருடைய மனைவி அருணா. இவர்களின் மகன் பிரபாஸ் (வயது 6). 3 பேரும் சித்தூர் மாவட்டம் கே.வி.பள்ளி மண்டலம் பாதவட்டிப்பள்ளியில் நடந்த உறவினர் திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு வந்தனர்.
திம்மாபுரம் வளைவில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோவிலில் திருமண நிகழ்ச்சி நடந்தது. அந்தக் கோவிலுக்கு 3 பேரும் வந்தபோது, திருமண மண்டபத்துக்கு அருகில் சித்தூர்-கர்னூல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக பீளேரை நோக்கி வேகமாக வந்த ஒரு லாரி திடீரென பிரபாஸ் மீது மோதியது. பெற்றோர் கண் எதிரே பிரபாஸ் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் வேகமாகச் சென்று விட்டது.
விபத்து குறித்து கே.வி.பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்மோகன், கலகடா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கலகடா போலீசார், லாரி டிரைவரை கைது செய்தனர். கே.வி.பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.