![](admin/uploads/.6088f2f7f3aff8.88756799.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வளசரவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:
ரஜினியின் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக பாரதிய ஜனதாவில் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தியும், மேற்பார்வையாளராக பல கட்சிகளில் இருந்து விலகி வந்த தமிழருவி மணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்தனை ஆண்டுகளில் ரசிகர் மன்றத்தை நிர்வகித்த நிர்வாகிகளில் ஒருவர் கூடவா உங்கள் கட்சியை ஒருங்கிணைத்து வழிநடத்த தகுதி பெறவில்லை? அவர்களில் ஏன் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை? இவ்வாறு கேள்வி எழுப்பினார்.