![](admin/uploads/.5de63c40ef00a1.07306191.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் பிஜேஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் விக்ரம் சிங் (35). இவரது மனைவி சிவ் கன்வர் (30). விக்ரம் வேலைக்கு செல்லாத நிலையில் அவரது மனைவி வேலைக்குச் சென்று வீட்டைக் கவனித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று சிவ் கன்வர் வீட்டில் இருந்து பணி செய்த நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த விக்ரம் அவரது மனைவியை இரண்டு கத்திரிக்கோல்களை பயன்படுத்தி கொடூரமாக கொலை செய்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்ற போது கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போன்று விக்ரம் தனது செல்போனில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்துள்ளார். அவரது மனைவி அறையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்று அவர்கள் வீட்டில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து விக்ரமை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.