![](admin/uploads/.61ab081ade0be5.73427605.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற திரைப்பட விழாவில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கலந்து கொண்டார். அப்போது எதிர்காலத்தில் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘யாருக்கு வாக்களிப்பது என்று மக்கள் குழப்பமாக இருக்கிறார்கள். திரைத்துறையினர் அரசியலுக்கு வந்து சிறப்பான ஆட்சி தந்துள்ளனர். அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சி தருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. நடிகர்கள் என்பதால் ஒதுக்க வேண்டியதில்லை. எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. நிச்சயமாக எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்.
சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றாலும் கலையின் மேல் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோருக்கு ஈடுபாடு உண்டு. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து நல்லது செய்தோர் நிறைய பேர் உண்டு. இவர்கள் அரசியலுக்கு வந்துவிடுவார்களோ என சிலர் பயப்படவும் வைக்கிறார்கள். புதிய கட்சியை நான் கூட தொடங்கலாமா என்று யோசிக்கிறேன். எனது கட்சிக்கு பெயர் புதிய பாதை. நான் மட்டுமல்ல நிறைய இளைஞர்களுக்கும் அரசியலுக்கு வர வேண்டும்’ என கூறினார்.
விழாவில், கடந்த 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக இயக்குநர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ தேர்வு செய்யப்பட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான இந்த விருதை இயக்குனர் பார்த்திபனுக்கு அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.