![](admin/uploads/.601d2310992a74.92805996.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
ஈரோட்டில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: ஊராட்சி, பேருராட்சி பகுதிகளில் விளையாட்டை ஊக்குவிக்க 67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வை பொறுத்தவரை தனியார் பள்ளிகள் மட்டும் ஆன்லைனில் தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இல்லை. பாடத்திட்ட குறைப்பு என்பது 9ம் வகுப்பு வரை 50 சதவீதம், 10 , 11 ,12ம் வகுப்பு 65 சதவீதம் பாடம் நடத்த வேண்டியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.