![](admin/uploads/.62970b6f624230.48089834.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: நல்லவர்களோடு இணைந்து 3வது அணி நிச்சயம் அமைப்போம் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தென்மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி நிச்சயம் அமையும். ஓவைசியோடு கூட்டணி வைப்பது குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம்.
டார்ச் லைட் சின்னம் முடக்கப்பட்ட விவகாரம் குறித்து நான்கு அல்லது 5 நாட்களில் நீதிமன்றத்தை நாடுவோம். சட்டமன்ற தேர்தலில் மக்கள் மாற்றத்தை நிகழ்த்துவார்கள். மக்கள் சக்தியை நம்பியே நாங்கள் களம் இறங்குகிறோம். எங்கள் கட்சி, யாருக்கும் பி.டீம் அல்ல. நாங்கள் எப்போதும் எங்களுக்கு ஏ டீம் தான். தேர்தல் வாக்குறுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இலவசமாக வழங்குவது உள்ளிட்டவைகள் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.