Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் ஆணைய குழு டிச. 21ம் தேதி தமிழகம் வருகை

டிசம்பர் 16, 2020 11:48

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையக்குழு வரும் 21ம் தேதி சென்னை வருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து டிசம்பர் 21, 22 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சென்னையில் ஆலோசிக்க உள்ளனர்.

டிசம்பர் 21 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் காவல் கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவினர் ஆலோசனை மேற்கொள்கின்றனர். டிசம்பர் 22 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் உயர்மட்ட குழுவினர் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பேச உள்ளனர். ஆலோசனைக்கு பின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் உயர்மட்ட குழு மனுக்களை பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்