Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாதனைபடைத்தார் இல்லத்தரசி சிவரஞ்சனி உதயகுமார்

டிசம்பர் 16, 2020 02:40

சென்னை: ஆங்கிலத்தில் A to Z வரை தலைகீழாக எழுவதில் 1 மணி நேரத்தில் 210 முறை எழுதி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் செய்துள்ளார் சென்னையை சேர்ந்த சிவரஞ்சனி உதயகுமார்.

தன்னுடைய அன்றாட பணிகளுக்கு மத்தியிலும் பெண்களால் எந்த சாதனையையும் செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்துள்ளார் இல்லத்தரசியான சிவரஞ்சனி உதயகுமார்.

இந்த சாதனை விருந்தை புதுச்சேரி மாநில பாராளுமன்றச் செயலர் இலட்சுமி நாராயணன், புதுச்சேரி தமிழ்ச்சங்க விழாவில் வழங்கி கெளரவித்தார். குடும்பத் தலைவிகளாலும் எல்லாவிதமான சாதனைகளையும் செய்ய முடியும் என்பதை சிவரஞ்சனி உதயகுமார் நிரூபித்துள்ளார் என விழாவில் பேசிய பாராளுமன்றச் செயலர் பாராட்டினார்.

தலைப்புச்செய்திகள்