Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டார்ச் லைட் சின்னம் விவகாரம்;  தேர்தல் ஆணையத்தில் கமல் கட்சி முறையீடு

டிசம்பர் 17, 2020 06:29

சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் நிராகரித்தது குறித்து, டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி முறையீடு செய்து உள்ளது.

புதுச்சேரிக்கு 2021 தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்துக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு அச்சின்னம் ஒதுக்கப்படவில்லை. இதனால், கமல்ஹாசன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், தமிழகத்திலும் டார்ச் லைட் சின்னம் கிடைப்பதற்காக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மேல்முறையீடு செய்வது என முடிவெடுத்து, அதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படாதது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதற்காக, சந்தோஷ் பாபு மற்றும் வழக்கறிஞர்கள் குழு டெல்லி சென்றது. தேர்தல் ஆணையத்திடம் அந்தக் குழு முறையீடு செய்துள்ளது.

முன்னதாக அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு, 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான சின்னங்களை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 'பிரஷர் குக்கர்’ சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு ’கரும்பு விவசாயி’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் நீதி மய்யத்துக்கு புதுச்சேரிக்கு மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  

தலைப்புச்செய்திகள்